பார்க்கவ குலத்தில் முதலியார், பிள்ளை அகமுடையார் பட்டங்கள்.


பார்க்கவ குலத்தில் முதலியார் என்ற பட்டம் கொண்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்றனர்.
சுருதிமான் படைமுதலி போன்ற கல்வெட்டுகள் படைக்கு தளபதியாக இருந்த நம்மவர்களுக்கு முதலியார் பட்டம் உண்டு என்பதை உறுதி செய்கிறது. 
பார்க்கவ குலம் பிள்ளை என்ற கௌரவ பட்டமாக பாண்டிச்சேரி பகுதிகளில் வாழும் பார்க்கவர்களுக்கு உண்டு. இவர்கள் அரசு ஆட்சி அதிகாரத்தில் மிகப்பெரிய அதிகார பதவிகளில் இருந்தவர்கள்.

அகமுடையார் என்ற பட்டம் நமக்கு நிறையவே இருந்திருக்கிறது. சுருதிமான் அகமுடையார் மலையமான் அகமுடையார். ஆதாரமே உண்டு. சங்க காலத்தில் தமிழ் நாட்டையே அரணாக நின்று தன் அகம் போல காத்தவர்கள் நம் மலையமான்கள் வம்சம் தான். அது போல வீரத்தினாலும் பிறப்பு உரிமையினாலும் அநேகமான நிலங்களின் உடைமை கொண்டவர்கள்.
நாட்டை பாதுகாப்பதினாலும் வீரத்தாலும் அகமுடையார் என்ற பட்டமும் (அகம்படியர் அல்ல) நமக்கு இருந்திருக்கிறது.

சுருதிமான் என்றால் என்ன பொருள்? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்றால் என்ன? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்ற சமஸ்கிருதப் பெயருக்கு சுத்தமான தமிழில் பண்புப்பெயராக வரும் பெயர் சான்றோன் என்பதாகும். 
சான்றோன் என்பதன் பொருள்:
அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன் என பொருள்படும். சுருதிமான் என்றாலும் இதே பொருள் தான். சான்றோன் என்பதற்கும் சுருதிமான் என்பதற்கும் மூப்பனார் என்றும் நேரடியாக பொருள் உண்டு. தமிழறிந்தோர் உணர்வார். 

சங்க இலக்கியத்தில் சான்றோன் என்ற சொல் பல இடங்களில் போர் வீரன் என்றே பொருள் வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சோழ படைகளில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களாக தளபதியாக இருந்தவர்கள் சுருதிமான்கள் தான். தளபதி=மூப்பனார்.

மேலும் சுருதிமான் =சான்றோன் = சூரியன் என்றும் பொருள் உண்டு.
சுருதிமான்கள் பார்க்கவ குலத்தில் சூரிய வம்சத்தவர்.

ஏன் நிச்சயமாக சொல்ல முடிகிறதென்றால், சுருதிமான்கள் காஷ்யப ரிஷியின் யாக நெருப்பில் இருந்து இரு அசுரர்களை அழிப்பதற்காக தோன்றியதாக ஒரு கல்வெட்டு உள்ளது. சூரியனின் தந்தை! காஷ்யப முனிவர் ஆவார். ஆகவே இது உறுதியான நிச்சயமான உண்மையாகும்.
சுருதிமான் என்றால் சான்றோன் என்றும் வீரன் என்றும் சூரிய வம்சத்தவன் என்றும் பொருள் வருகிறது.
இந்த உண்மையை மாற்றார் பலரும் புரிந்து கொண்டுள்ளனர். சுருதிமானை உரிமை கோரிப்பார்த்தனர் ஆனால் அது தான் முடியாதே.
ஏனென்றால் நம் மலையமான் நத்தமான் சுருதிமான் மூவரும் மலையமான் தெய்வீகராஜ வம்சம் உடையார் ஜாதி என்று செப்பேடு தெளிவாக கூறுகிறதே.
ஆகவே சுருதிமான்கள் அரச பரம்பரை என்பதற்கு ஆதாரம் வலுவாக இருப்பதாலும் சுருதிமான்களின் பெருமைகளைக் கொண்டு அரச பரம்பரை உரிமை கோரலாம் என்று நாடாழ்வான் என்ற சுருதிமானின் பட்டத்தைக் கொண்டு  திட்டமிட்டு காய் நகற்றிய ஒரு கூட்டத்திற்கு நம் இன வரலாற்றின் ஆதாரங்களின் தீர்க்கத்தின் காரணமாக அவர்களுக்கு இந்த வரலாற்று திருட்டில் ஏமாற்றம் மட்டும் தான் பலனாக கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தே விட்டது.

ஆகவே இனி வரும் நாட்களில் சுருதிமான்களின் வரலாறும் கல்வெட்டுகளும் சுத்தமாக மறைக்கப்பட்டு விடும். ஏன் இப்படி கூறுகின்றோம் என்றால் ஏற்கனவே சுருதிமான்களை பற்றி இருந்த சில கல்வெட்டு ஆவணங்கள் அப்படியே மறைக்கப்பட்டு விட்டன. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு தெரிந்த அதிர்ச்சியான உண்மை.

மலையமானின் பார்க்கவ குல சுருதிமான் வம்சத்தில் தேவர் பட்டம்.


1. ஊற்றத்தூருடைய சுருதிமான் ஜனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.

2. சுருதிமான் சோரன் சொந்தன் ஆன இலங்கேஸ்வர தேவன். 

3. சுருதிமான் தேவன் பொழிமிகாமன். ,.

சாளுக்ய அரசன் சத்யாசிரயனுடைய பட்டத்து யானையைக் கொன்ற சத்திரியன் சுருதிமான் நக்கன் சந்திரன்.

கிபி 1015 ம் வருடம் முதலாம் ராஜேந்திர சோழனுடைய யானைப்படைத் தளபதியாக திகழ்ந்த மாவீரன் சத்ரிய குல சிங்கம் சுருதிமான் நக்கன் சந்திரன் கடக்கம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பட்டத்து யானையைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்தான். இத் தளபதியின் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்ததாக கல்வெட்டு காணப்படுகிறது.
சுருதிமான்கள் அனைவருமே சிறந்த போர்வீரர்களாக அதிலும் தளபதியாக திகழ்ந்திருக்கின்றனர்.
சுருதிமானின் சில பட்டங்கள் மட்டும்
உடையான் ,அரையன்,பேரரையன், விழுப்பரையன், வானராயர், இருங்கோளன், சுருதிமான் மறவன் கண்டன்(சுத்த வீரன்), நிஷாத ராஜன், படைமுதலி, தெரிந்த வில்லிகள், சுருதிமான் வன்னிய நாயன், நாயன். முத்தரையன், ராஜமல்லன், சுருதிமான் ஊரன் நம்பி(கத்திக்காரன்), மழவன், சுருதிமான் நாட்டார், நாடாள்வான் என்று இது போன்று இன்னும் அநேகம் பட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் பட்டங்களே இது போருக்கு சென்றவர் யாருக்கும் கிடைக்கலாம்.
ஆனால் இதில் அரசகுலவன் (பார்க்கவ குலம்,யது குலம்)என்று காணப்படுகிறதே இது தான் சத்திரியன் என்ற இனத்தைக் குறிப்பது. போருக்கு எல்லோரும் சென்றிருப்பதாக கூறுவார்கள். ஆனால் அவர் அனைவருக்கும் இம்மாதிரி அரசகுலத்தவர்(சத்திரியன்) என்று கல்வெட்டு காணப்படாது உறுதியாக. இது அரச வம்சத்தவர்க்கு மட்டுமே உரியது.

கிபி 1218 ம் வருடத்திய கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியில் வேத காலத்தில் காஷ்யப ரிஷி இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக செய்த வேள்வியின் போது அந்த அக்னியில் இருந்து சுருதிமான்களைப் படைத்தார் என்று புராணக் கதை ஒன்று காணப்படுகிறது. நம் குல முதல்வன் தெய்வீக ராஜனே இவ்விதம் பார்க்கவ முனிவரின் யாகத்தில் தோன்றியவர் தானே.

மேலும் முக்கியமாக பார்க்கவ குலத்தவன் என்றும் யது குலம் என்றும் அரசகுலத்தவன் என்றும் உடையான் என்றும் மலையமான் நத்தமான் சுருதிமான் ஆகிய இம் மூவருக்குமே பொது ஒற்றுமை கொண்ட கல்வெட்டுகள் காணப்படுகிறது. ஆகவே தான் நாம் பார்க்கவ குல உடையார்கள் வேற்றுமைக்கு நமக்குள் வழியே இல்லை. வீரத்திற்கும் பாரம்பரியப்பெருமைக்கும் பண்பிற்கும் நமக்கு குறை ஒன்றுமில்லை.

பார்க்கவ குல உடையார் சரராமன் சடையன் சேதிராயன் என்ற சடையப்ப வள்ளல் .

சோழமண்டல சதகம் கூறும் உடையார் குலமும் சேதிராயர் இனமும்.   ...................................................................................................................................................................

உடையார் குலத்தில் பலவகையும்
உயர்வே ளாளர் பலவகையும்
குடையார் குலத்தில் பலவகையும்
கோனார் குலத்தில் பலவகையும்
அடைய வாயில் உடையாராய்&
அளகே சனைப்போல் அருங்கடலின்
மடையார் செல்வம் பெரிதாக
வளம்சேர் சோழ மண்டலமே 30
உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்

என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.
.................................................................................................................
வள்ளல் குலத்தோராக கம்பன் கூறும் இனத்தவர்கள்:

உடையார் குலத்தில் பலவகையும் அதாவது உடையார் என்றாலே பார்க்கவ குலம்(நத்தமான்) என்றே பொருள் கூறுகிறார் ஆசிரியர்.

சுருதிமானும் மலையமானும் இதே பார்க்கவ குலத்தையே சார்ந்தவர்கள் என்றும் இதையே உடையார் குலத்தில் பலவகையும் என்று அழகாக தெளிவுபடுத்துகிறார் உரையாசிரியர். நத்தமான்,மலையமான்,சுருதிமான் மூவருக்கும் பார்க்கவ கோத்திரம் என்ற கல்வெட்டு,செப்பேடு ஆதாரம் இருப்பதும் இதையே தெளிவாக உறுதி செய்கிறது.

செல்வந்தராய் இருந்து வாரி வழங்கும் வள்ளல் குலத்தினர் என்று கம்பர் கூறும் குலங்களாவது நம் பார்க்கவ குல உடையார் குலம் ஒன்றும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உயர் வேளாளர் அதாவது உழுதுண்ணும் வெள்ளாளர் அல்லாது உழுவித்துண்ணும் உயர் குடி வேளாளர் இனத்தவரையும் (சோழிய வேளாளர்),
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குடையார் குலத்தில் பலவகையும் இவர்கள் திரைகடலோடி திரவியம் தேடிய வணிக குலத்தவர் ஆகிய பண்பிற் சிறந்த சிவ நேசச் செல்வர்கள் ஆகிய நகரத்தார் என்ற செட்டியார் இனத்தவர்களையும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கோனார் குலத்தில் பலவகையும், அதாவது ஆநிரைச் செல்வங்கள் அநேகம் கொண்ட செல்வக் குடியினரான கோனார் குலத்தில் உள்ளவர்களையும் கூறுகிறார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆக இந்த உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகியோர் குபேரனைப் போல செல்வம் கொண்டவர்கள் என்றும் இவர்களில் பலர் வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்துள்ளார்கள் சோழ தேசத்தில் என்கிறார்.

சடையப்ப வள்ளல் இவர்களில் நம் பார்க்கவ குல உடையார்
இனத்தவர் ஆகவே அவரை உடையான் சரராமன் என்று கம்பர் கூறுகிறார்.

மேலும்
குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூறவிணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனுமணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே சோழமண்டல சதகம்

நம் உடையார் இனத்தில் பிற்கால மலையமான்கள் சேதிராயர் பட்டம் கொண்டு ஆண்டுள்ளனர். அதையே இங்கு உடையான் சடையப்ப வள்ளலுக்கு உள்ள சேதிராயன் பட்டம் உறுதி செய்கிறது. ஆக என்றைக்கும் சிறந்த புகழ் வாய்ந்த வள்ளல் குலமும் வேளிர் குலமும் உடையார் குலமாகிய நம் பார்க்கவ குலமே ஆகும்.
எளியோர்க்கு ஈவதே எம் பிறவிக் கடன் எனக் கொள்ளுங்கள் வள்ளல் குலமாகிய பார்க்கவ குலத்தோரே. அதுவே நம் குல தர்மம் ஆகும்.

பார்க்கவ குலத்தின் பட்டங்களும் விருதுகளும்

தெய்வீகன் மலையமான் நரசிங்க உடையாரின் வம்சாவழியினரான சுருதிமான்,மலையமான்,நத்தமான் மரபினர் பார்க்கவ குலம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் மரபுவழி வந்தவர்களே சேதிநாடு,மலையமாநாடு,நடுநாடு,நத்த நாடு,மாவலி நாடு,பெண்ணை நாடு,கோவல நாடு,தெய்வீக நாடு,முள்ளூர் நாடு  என்றெல்லாம் அழைக்கப்படும் நடுநாட்டுப் பகுதிக்கு அரசனாகவும், வேளிராகவும்,போர் வீரராகவும்,சோழனின் போர்ப்படைத் தளபதியாகவும்,பெரிய அதிகார பதவிகளிலும்,கருவூலக் காவல் அதிகாரியாகவும் இருந்தமையால் உடையார் குலத்தவர்க்கு அநேகமான பட்டங்களும்,விருதுப் பெயர்களும் உண்டு.

 

பட்டங்கள்

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
உடையார் 
நயினார் 
மூப்பனார்

இவை ஆறும் தற்போது பார்க்கவ குலத்திற்கு வழங்கி வரும் பொதுவான பட்டங்கள்.

..............................................................................................................

விருதுகளும் பட்டங்களும்.

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
வேளிர் 
வேள்
சேதிராயர்
மலாடுடையார்
மிலாடுடையார்
முனையரையர்
மலையரையர்(மலையர்களை ஆண்டவன்)
கோவலரையர்(கோவலர்களை ஆண்டவன்)
கோவலன்
கொங்குராயர்(கொங்கர்களை ஆண்டவன்)
பண்டரையர் 
பண்டாரத்தார்(கருவூல காவல் அதிகாரி)
பண்டாரியார்
பாளையத்தார்
கொங்கராய பாளையத்தார்
நாட்டார்
பெரிய நாட்டார்
சீமை நாட்டார்
தேவன்
அரையத்தேவன்
மலையராயர்
மலையரசன்
மழவராயர்(மழவர்களை ஆண்டவன்)
மலாடர்
சேதியர்
சேதிபர்
சேதியர் கோன்.(சேதியர்களின் அரசன்)
மகத நாடாள்வார்
மகத நாடன்
சேதி நாடன்
நாடாள்வான்
கத்திக்காரர்
சவளக்காரர்
வன்னியர்
காவல்காரர்
வன்னிய நாயகன்
காடவராயர்
பல்லவராயர்
நான்முடியன்
நரசிங்க மைந்தன்
நந்திப் பொருப்பன்
பெண்ணை நாடன்
மாவலி நாடன் 
வில்லாளன்
பதினெண் புவியன்
கோவல் வேந்தன்
வலாரித்துறையன்
பெண்ணைத் துறைவன்
நத்த நாட்டேந்தல்
இறையாபுரியான்
இரண கேசரி 
வர்மன்
தொண்டைமான்
கச்சிராயர்
மலைய குல ராசன்
மலாடர் கோமான்(மலையர்களின் அரசன்)
அருணாட்டேந்தன்
மூப்பர்பிதா
வேதமுணர்ந்தோன்
வேனாட்டான்
கொங்கர் கோன்
கோவலூரான்
குடவல கோவல காவலன்
பெண்ணையம் படப்பை நாடு களவோன்.
மலைய நத்தன்
மலையமன்னன் (உடையார்,நயினார்)
நத்தமன்னன் (உடையார்)
சுருதிமன்னன் (உடையாரில் மூப்பனார்)
இருங்கோவேளர்(சுருதிமான்)
வாணராயர் 
வாணகோவரையர் 
வானாதிராயர் இன்னும் அநேகம் பட்டங்களும் விருதுகளும் உண்டு.