பார்க்கவ குலத்தில் முதலியார் என்ற பட்டம் கொண்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்றனர்.
சுருதிமான் படைமுதலி போன்ற கல்வெட்டுகள் படைக்கு தளபதியாக இருந்த நம்மவர்களுக்கு முதலியார் பட்டம் உண்டு என்பதை உறுதி செய்கிறது.
பார்க்கவ குலம் பிள்ளை என்ற கௌரவ பட்டமாக பாண்டிச்சேரி பகுதிகளில் வாழும் பார்க்கவர்களுக்கு உண்டு. இவர்கள் அரசு ஆட்சி அதிகாரத்தில் மிகப்பெரிய அதிகார பதவிகளில் இருந்தவர்கள்.
அகமுடையார் என்ற பட்டம் நமக்கு நிறையவே இருந்திருக்கிறது. சுருதிமான் அகமுடையார் மலையமான் அகமுடையார். ஆதாரமே உண்டு. சங்க காலத்தில் தமிழ் நாட்டையே அரணாக நின்று தன் அகம் போல காத்தவர்கள் நம் மலையமான்கள் வம்சம் தான். அது போல வீரத்தினாலும் பிறப்பு உரிமையினாலும் அநேகமான நிலங்களின் உடைமை கொண்டவர்கள்.
நாட்டை பாதுகாப்பதினாலும் வீரத்தாலும் அகமுடையார் என்ற பட்டமும் (அகம்படியர் அல்ல) நமக்கு இருந்திருக்கிறது.