பார்க்கவ குலத்தில் முதலியார், பிள்ளை அகமுடையார் பட்டங்கள்.


பார்க்கவ குலத்தில் முதலியார் என்ற பட்டம் கொண்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்றனர்.
சுருதிமான் படைமுதலி போன்ற கல்வெட்டுகள் படைக்கு தளபதியாக இருந்த நம்மவர்களுக்கு முதலியார் பட்டம் உண்டு என்பதை உறுதி செய்கிறது. 
பார்க்கவ குலம் பிள்ளை என்ற கௌரவ பட்டமாக பாண்டிச்சேரி பகுதிகளில் வாழும் பார்க்கவர்களுக்கு உண்டு. இவர்கள் அரசு ஆட்சி அதிகாரத்தில் மிகப்பெரிய அதிகார பதவிகளில் இருந்தவர்கள்.

அகமுடையார் என்ற பட்டம் நமக்கு நிறையவே இருந்திருக்கிறது. சுருதிமான் அகமுடையார் மலையமான் அகமுடையார். ஆதாரமே உண்டு. சங்க காலத்தில் தமிழ் நாட்டையே அரணாக நின்று தன் அகம் போல காத்தவர்கள் நம் மலையமான்கள் வம்சம் தான். அது போல வீரத்தினாலும் பிறப்பு உரிமையினாலும் அநேகமான நிலங்களின் உடைமை கொண்டவர்கள்.
நாட்டை பாதுகாப்பதினாலும் வீரத்தாலும் அகமுடையார் என்ற பட்டமும் (அகம்படியர் அல்ல) நமக்கு இருந்திருக்கிறது.

சுருதிமான் என்றால் என்ன பொருள்? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்றால் என்ன? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்ற சமஸ்கிருதப் பெயருக்கு சுத்தமான தமிழில் பண்புப்பெயராக வரும் பெயர் சான்றோன் என்பதாகும். 
சான்றோன் என்பதன் பொருள்:
அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன் என பொருள்படும். சுருதிமான் என்றாலும் இதே பொருள் தான். சான்றோன் என்பதற்கும் சுருதிமான் என்பதற்கும் மூப்பனார் என்றும் நேரடியாக பொருள் உண்டு. தமிழறிந்தோர் உணர்வார். 

சங்க இலக்கியத்தில் சான்றோன் என்ற சொல் பல இடங்களில் போர் வீரன் என்றே பொருள் வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சோழ படைகளில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களாக தளபதியாக இருந்தவர்கள் சுருதிமான்கள் தான். தளபதி=மூப்பனார்.

மேலும் சுருதிமான் =சான்றோன் = சூரியன் என்றும் பொருள் உண்டு.
சுருதிமான்கள் பார்க்கவ குலத்தில் சூரிய வம்சத்தவர்.

ஏன் நிச்சயமாக சொல்ல முடிகிறதென்றால், சுருதிமான்கள் காஷ்யப ரிஷியின் யாக நெருப்பில் இருந்து இரு அசுரர்களை அழிப்பதற்காக தோன்றியதாக ஒரு கல்வெட்டு உள்ளது. சூரியனின் தந்தை! காஷ்யப முனிவர் ஆவார். ஆகவே இது உறுதியான நிச்சயமான உண்மையாகும்.
சுருதிமான் என்றால் சான்றோன் என்றும் வீரன் என்றும் சூரிய வம்சத்தவன் என்றும் பொருள் வருகிறது.
இந்த உண்மையை மாற்றார் பலரும் புரிந்து கொண்டுள்ளனர். சுருதிமானை உரிமை கோரிப்பார்த்தனர் ஆனால் அது தான் முடியாதே.
ஏனென்றால் நம் மலையமான் நத்தமான் சுருதிமான் மூவரும் மலையமான் தெய்வீகராஜ வம்சம் உடையார் ஜாதி என்று செப்பேடு தெளிவாக கூறுகிறதே.
ஆகவே சுருதிமான்கள் அரச பரம்பரை என்பதற்கு ஆதாரம் வலுவாக இருப்பதாலும் சுருதிமான்களின் பெருமைகளைக் கொண்டு அரச பரம்பரை உரிமை கோரலாம் என்று நாடாழ்வான் என்ற சுருதிமானின் பட்டத்தைக் கொண்டு  திட்டமிட்டு காய் நகற்றிய ஒரு கூட்டத்திற்கு நம் இன வரலாற்றின் ஆதாரங்களின் தீர்க்கத்தின் காரணமாக அவர்களுக்கு இந்த வரலாற்று திருட்டில் ஏமாற்றம் மட்டும் தான் பலனாக கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தே விட்டது.

ஆகவே இனி வரும் நாட்களில் சுருதிமான்களின் வரலாறும் கல்வெட்டுகளும் சுத்தமாக மறைக்கப்பட்டு விடும். ஏன் இப்படி கூறுகின்றோம் என்றால் ஏற்கனவே சுருதிமான்களை பற்றி இருந்த சில கல்வெட்டு ஆவணங்கள் அப்படியே மறைக்கப்பட்டு விட்டன. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு தெரிந்த அதிர்ச்சியான உண்மை.

மலையமானின் பார்க்கவ குல சுருதிமான் வம்சத்தில் தேவர் பட்டம்.


1. ஊற்றத்தூருடைய சுருதிமான் ஜனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.

2. சுருதிமான் சோரன் சொந்தன் ஆன இலங்கேஸ்வர தேவன். 

3. சுருதிமான் தேவன் பொழிமிகாமன். ,.