பார்க்கவ குலத்தில் முதலியார், பிள்ளை அகமுடையார் பட்டங்கள்.


பார்க்கவ குலத்தில் முதலியார் என்ற பட்டம் கொண்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்றனர்.
சுருதிமான் படைமுதலி போன்ற கல்வெட்டுகள் படைக்கு தளபதியாக இருந்த நம்மவர்களுக்கு முதலியார் பட்டம் உண்டு என்பதை உறுதி செய்கிறது. 
பார்க்கவ குலம் பிள்ளை என்ற கௌரவ பட்டமாக பாண்டிச்சேரி பகுதிகளில் வாழும் பார்க்கவர்களுக்கு உண்டு. இவர்கள் அரசு ஆட்சி அதிகாரத்தில் மிகப்பெரிய அதிகார பதவிகளில் இருந்தவர்கள்.

அகமுடையார் என்ற பட்டம் நமக்கு நிறையவே இருந்திருக்கிறது. சுருதிமான் அகமுடையார் மலையமான் அகமுடையார். ஆதாரமே உண்டு. சங்க காலத்தில் தமிழ் நாட்டையே அரணாக நின்று தன் அகம் போல காத்தவர்கள் நம் மலையமான்கள் வம்சம் தான். அது போல வீரத்தினாலும் பிறப்பு உரிமையினாலும் அநேகமான நிலங்களின் உடைமை கொண்டவர்கள்.
நாட்டை பாதுகாப்பதினாலும் வீரத்தாலும் அகமுடையார் என்ற பட்டமும் (அகம்படியர் அல்ல) நமக்கு இருந்திருக்கிறது.

சுருதிமான் என்றால் என்ன பொருள்? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்றால் என்ன? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்ற சமஸ்கிருதப் பெயருக்கு சுத்தமான தமிழில் பண்புப்பெயராக வரும் பெயர் சான்றோன் என்பதாகும். 
சான்றோன் என்பதன் பொருள்:
அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன் என பொருள்படும். சுருதிமான் என்றாலும் இதே பொருள் தான். சான்றோன் என்பதற்கும் சுருதிமான் என்பதற்கும் மூப்பனார் என்றும் நேரடியாக பொருள் உண்டு. தமிழறிந்தோர் உணர்வார். 

சங்க இலக்கியத்தில் சான்றோன் என்ற சொல் பல இடங்களில் போர் வீரன் என்றே பொருள் வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சோழ படைகளில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களாக தளபதியாக இருந்தவர்கள் சுருதிமான்கள் தான். தளபதி=மூப்பனார்.

மேலும் சுருதிமான் =சான்றோன் = சூரியன் என்றும் பொருள் உண்டு.
சுருதிமான்கள் பார்க்கவ குலத்தில் சூரிய வம்சத்தவர்.

ஏன் நிச்சயமாக சொல்ல முடிகிறதென்றால், சுருதிமான்கள் காஷ்யப ரிஷியின் யாக நெருப்பில் இருந்து இரு அசுரர்களை அழிப்பதற்காக தோன்றியதாக ஒரு கல்வெட்டு உள்ளது. சூரியனின் தந்தை! காஷ்யப முனிவர் ஆவார். ஆகவே இது உறுதியான நிச்சயமான உண்மையாகும்.
சுருதிமான் என்றால் சான்றோன் என்றும் வீரன் என்றும் சூரிய வம்சத்தவன் என்றும் பொருள் வருகிறது.
இந்த உண்மையை மாற்றார் பலரும் புரிந்து கொண்டுள்ளனர். சுருதிமானை உரிமை கோரிப்பார்த்தனர் ஆனால் அது தான் முடியாதே.
ஏனென்றால் நம் மலையமான் நத்தமான் சுருதிமான் மூவரும் மலையமான் தெய்வீகராஜ வம்சம் உடையார் ஜாதி என்று செப்பேடு தெளிவாக கூறுகிறதே.
ஆகவே சுருதிமான்கள் அரச பரம்பரை என்பதற்கு ஆதாரம் வலுவாக இருப்பதாலும் சுருதிமான்களின் பெருமைகளைக் கொண்டு அரச பரம்பரை உரிமை கோரலாம் என்று நாடாழ்வான் என்ற சுருதிமானின் பட்டத்தைக் கொண்டு  திட்டமிட்டு காய் நகற்றிய ஒரு கூட்டத்திற்கு நம் இன வரலாற்றின் ஆதாரங்களின் தீர்க்கத்தின் காரணமாக அவர்களுக்கு இந்த வரலாற்று திருட்டில் ஏமாற்றம் மட்டும் தான் பலனாக கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தே விட்டது.

ஆகவே இனி வரும் நாட்களில் சுருதிமான்களின் வரலாறும் கல்வெட்டுகளும் சுத்தமாக மறைக்கப்பட்டு விடும். ஏன் இப்படி கூறுகின்றோம் என்றால் ஏற்கனவே சுருதிமான்களை பற்றி இருந்த சில கல்வெட்டு ஆவணங்கள் அப்படியே மறைக்கப்பட்டு விட்டன. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு தெரிந்த அதிர்ச்சியான உண்மை.

மலையமானின் பார்க்கவ குல சுருதிமான் வம்சத்தில் தேவர் பட்டம்.


1. ஊற்றத்தூருடைய சுருதிமான் ஜனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.

2. சுருதிமான் சோரன் சொந்தன் ஆன இலங்கேஸ்வர தேவன். 

3. சுருதிமான் தேவன் பொழிமிகாமன். ,.

சாளுக்ய அரசன் சத்யாசிரயனுடைய பட்டத்து யானையைக் கொன்ற சத்திரியன் சுருதிமான் நக்கன் சந்திரன்.

கிபி 1015 ம் வருடம் முதலாம் ராஜேந்திர சோழனுடைய யானைப்படைத் தளபதியாக திகழ்ந்த மாவீரன் சத்ரிய குல சிங்கம் சுருதிமான் நக்கன் சந்திரன் கடக்கம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பட்டத்து யானையைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்தான். இத் தளபதியின் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்ததாக கல்வெட்டு காணப்படுகிறது.
சுருதிமான்கள் அனைவருமே சிறந்த போர்வீரர்களாக அதிலும் தளபதியாக திகழ்ந்திருக்கின்றனர்.
சுருதிமானின் சில பட்டங்கள் மட்டும்
உடையான் ,அரையன்,பேரரையன், விழுப்பரையன், வானராயர், இருங்கோளன், சுருதிமான் மறவன் கண்டன்(சுத்த வீரன்), நிஷாத ராஜன், படைமுதலி, தெரிந்த வில்லிகள், சுருதிமான் வன்னிய நாயன், நாயன். முத்தரையன், ராஜமல்லன், சுருதிமான் ஊரன் நம்பி(கத்திக்காரன்), மழவன், சுருதிமான் நாட்டார், நாடாள்வான் என்று இது போன்று இன்னும் அநேகம் பட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் பட்டங்களே இது போருக்கு சென்றவர் யாருக்கும் கிடைக்கலாம்.
ஆனால் இதில் அரசகுலவன் (பார்க்கவ குலம்,யது குலம்)என்று காணப்படுகிறதே இது தான் சத்திரியன் என்ற இனத்தைக் குறிப்பது. போருக்கு எல்லோரும் சென்றிருப்பதாக கூறுவார்கள். ஆனால் அவர் அனைவருக்கும் இம்மாதிரி அரசகுலத்தவர்(சத்திரியன்) என்று கல்வெட்டு காணப்படாது உறுதியாக. இது அரச வம்சத்தவர்க்கு மட்டுமே உரியது.

கிபி 1218 ம் வருடத்திய கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியில் வேத காலத்தில் காஷ்யப ரிஷி இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக செய்த வேள்வியின் போது அந்த அக்னியில் இருந்து சுருதிமான்களைப் படைத்தார் என்று புராணக் கதை ஒன்று காணப்படுகிறது. நம் குல முதல்வன் தெய்வீக ராஜனே இவ்விதம் பார்க்கவ முனிவரின் யாகத்தில் தோன்றியவர் தானே.

மேலும் முக்கியமாக பார்க்கவ குலத்தவன் என்றும் யது குலம் என்றும் அரசகுலத்தவன் என்றும் உடையான் என்றும் மலையமான் நத்தமான் சுருதிமான் ஆகிய இம் மூவருக்குமே பொது ஒற்றுமை கொண்ட கல்வெட்டுகள் காணப்படுகிறது. ஆகவே தான் நாம் பார்க்கவ குல உடையார்கள் வேற்றுமைக்கு நமக்குள் வழியே இல்லை. வீரத்திற்கும் பாரம்பரியப்பெருமைக்கும் பண்பிற்கும் நமக்கு குறை ஒன்றுமில்லை.

பார்க்கவ குல உடையார் சரராமன் சடையன் சேதிராயன் என்ற சடையப்ப வள்ளல் .

சோழமண்டல சதகம் கூறும் உடையார் குலமும் சேதிராயர் இனமும்.   ...................................................................................................................................................................

உடையார் குலத்தில் பலவகையும்
உயர்வே ளாளர் பலவகையும்
குடையார் குலத்தில் பலவகையும்
கோனார் குலத்தில் பலவகையும்
அடைய வாயில் உடையாராய்&
அளகே சனைப்போல் அருங்கடலின்
மடையார் செல்வம் பெரிதாக
வளம்சேர் சோழ மண்டலமே 30
உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்

என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.
.................................................................................................................
வள்ளல் குலத்தோராக கம்பன் கூறும் இனத்தவர்கள்:

உடையார் குலத்தில் பலவகையும் அதாவது உடையார் என்றாலே பார்க்கவ குலம்(நத்தமான்) என்றே பொருள் கூறுகிறார் ஆசிரியர்.

சுருதிமானும் மலையமானும் இதே பார்க்கவ குலத்தையே சார்ந்தவர்கள் என்றும் இதையே உடையார் குலத்தில் பலவகையும் என்று அழகாக தெளிவுபடுத்துகிறார் உரையாசிரியர். நத்தமான்,மலையமான்,சுருதிமான் மூவருக்கும் பார்க்கவ கோத்திரம் என்ற கல்வெட்டு,செப்பேடு ஆதாரம் இருப்பதும் இதையே தெளிவாக உறுதி செய்கிறது.

செல்வந்தராய் இருந்து வாரி வழங்கும் வள்ளல் குலத்தினர் என்று கம்பர் கூறும் குலங்களாவது நம் பார்க்கவ குல உடையார் குலம் ஒன்றும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உயர் வேளாளர் அதாவது உழுதுண்ணும் வெள்ளாளர் அல்லாது உழுவித்துண்ணும் உயர் குடி வேளாளர் இனத்தவரையும் (சோழிய வேளாளர்),
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குடையார் குலத்தில் பலவகையும் இவர்கள் திரைகடலோடி திரவியம் தேடிய வணிக குலத்தவர் ஆகிய பண்பிற் சிறந்த சிவ நேசச் செல்வர்கள் ஆகிய நகரத்தார் என்ற செட்டியார் இனத்தவர்களையும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கோனார் குலத்தில் பலவகையும், அதாவது ஆநிரைச் செல்வங்கள் அநேகம் கொண்ட செல்வக் குடியினரான கோனார் குலத்தில் உள்ளவர்களையும் கூறுகிறார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆக இந்த உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகியோர் குபேரனைப் போல செல்வம் கொண்டவர்கள் என்றும் இவர்களில் பலர் வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்துள்ளார்கள் சோழ தேசத்தில் என்கிறார்.

சடையப்ப வள்ளல் இவர்களில் நம் பார்க்கவ குல உடையார்
இனத்தவர் ஆகவே அவரை உடையான் சரராமன் என்று கம்பர் கூறுகிறார்.

மேலும்
குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூறவிணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனுமணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே சோழமண்டல சதகம்

நம் உடையார் இனத்தில் பிற்கால மலையமான்கள் சேதிராயர் பட்டம் கொண்டு ஆண்டுள்ளனர். அதையே இங்கு உடையான் சடையப்ப வள்ளலுக்கு உள்ள சேதிராயன் பட்டம் உறுதி செய்கிறது. ஆக என்றைக்கும் சிறந்த புகழ் வாய்ந்த வள்ளல் குலமும் வேளிர் குலமும் உடையார் குலமாகிய நம் பார்க்கவ குலமே ஆகும்.
எளியோர்க்கு ஈவதே எம் பிறவிக் கடன் எனக் கொள்ளுங்கள் வள்ளல் குலமாகிய பார்க்கவ குலத்தோரே. அதுவே நம் குல தர்மம் ஆகும்.

பார்க்கவ குலத்தின் பட்டங்களும் விருதுகளும்

தெய்வீகன் மலையமான் நரசிங்க உடையாரின் வம்சாவழியினரான சுருதிமான்,மலையமான்,நத்தமான் மரபினர் பார்க்கவ குலம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் மரபுவழி வந்தவர்களே சேதிநாடு,மலையமாநாடு,நடுநாடு,நத்த நாடு,மாவலி நாடு,பெண்ணை நாடு,கோவல நாடு,தெய்வீக நாடு,முள்ளூர் நாடு  என்றெல்லாம் அழைக்கப்படும் நடுநாட்டுப் பகுதிக்கு அரசனாகவும், வேளிராகவும்,போர் வீரராகவும்,சோழனின் போர்ப்படைத் தளபதியாகவும்,பெரிய அதிகார பதவிகளிலும்,கருவூலக் காவல் அதிகாரியாகவும் இருந்தமையால் உடையார் குலத்தவர்க்கு அநேகமான பட்டங்களும்,விருதுப் பெயர்களும் உண்டு.

 

பட்டங்கள்

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
உடையார் 
நயினார் 
மூப்பனார்

இவை ஆறும் தற்போது பார்க்கவ குலத்திற்கு வழங்கி வரும் பொதுவான பட்டங்கள்.

..............................................................................................................

விருதுகளும் பட்டங்களும்.

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
வேளிர் 
வேள்
சேதிராயர்
மலாடுடையார்
மிலாடுடையார்
முனையரையர்
மலையரையர்(மலையர்களை ஆண்டவன்)
கோவலரையர்(கோவலர்களை ஆண்டவன்)
கோவலன்
கொங்குராயர்(கொங்கர்களை ஆண்டவன்)
பண்டரையர் 
பண்டாரத்தார்(கருவூல காவல் அதிகாரி)
பண்டாரியார்
பாளையத்தார்
கொங்கராய பாளையத்தார்
நாட்டார்
பெரிய நாட்டார்
சீமை நாட்டார்
தேவன்
அரையத்தேவன்
மலையராயர்
மலையரசன்
மழவராயர்(மழவர்களை ஆண்டவன்)
மலாடர்
சேதியர்
சேதிபர்
சேதியர் கோன்.(சேதியர்களின் அரசன்)
மகத நாடாள்வார்
மகத நாடன்
சேதி நாடன்
நாடாள்வான்
கத்திக்காரர்
சவளக்காரர்
வன்னியர்
காவல்காரர்
வன்னிய நாயகன்
காடவராயர்
பல்லவராயர்
நான்முடியன்
நரசிங்க மைந்தன்
நந்திப் பொருப்பன்
பெண்ணை நாடன்
மாவலி நாடன் 
வில்லாளன்
பதினெண் புவியன்
கோவல் வேந்தன்
வலாரித்துறையன்
பெண்ணைத் துறைவன்
நத்த நாட்டேந்தல்
இறையாபுரியான்
இரண கேசரி 
வர்மன்
தொண்டைமான்
கச்சிராயர்
மலைய குல ராசன்
மலாடர் கோமான்(மலையர்களின் அரசன்)
அருணாட்டேந்தன்
மூப்பர்பிதா
வேதமுணர்ந்தோன்
வேனாட்டான்
கொங்கர் கோன்
கோவலூரான்
குடவல கோவல காவலன்
பெண்ணையம் படப்பை நாடு களவோன்.
மலைய நத்தன்
மலையமன்னன் (உடையார்,நயினார்)
நத்தமன்னன் (உடையார்)
சுருதிமன்னன் (உடையாரில் மூப்பனார்)
இருங்கோவேளர்(சுருதிமான்)
வாணராயர் 
வாணகோவரையர் 
வானாதிராயர் இன்னும் அநேகம் பட்டங்களும் விருதுகளும் உண்டு.

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.




சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது. குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது. பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்குள் உள்ளது.

மேலும் இம்மூவரும் சகோதரர் என்று கூறப்பட்டுள்ளது. சகோதரர் என்று கூறும் போது மூவரும் ஒரே  வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் என்பதே உண்மையாகும். தெய்வீக ராஜனின் காலமும் இவர்களின் காலமும் வேறுபட்டாலும் தெய்வீகன் மலையமான் நரசிம்ம உடையானின் பார்க்கவ வம்சத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் தான் இவர்கள் மூவரும் என்ற தகவலை பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீக ராஜன் பற்றிய செப்பேடு உறுதி செய்கிறது.


மேலும் நாயன்மார் இருவர் சேதிநாட்டில் ஒரே கால கட்டத்தில் ஆண்டதனாலும் சைவ சமயம் சிறந்து விளங்கிய கால கட்டத்தில் மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர் இருவரது பெருமையும் கொண்டாடப்பட்டது. ஆகவே சுருதிமான் குலசேகரர் பற்றிய தகவல்கள் ஓரளவே காணப்படும்.

அதில் அவர் சுருதிகள்(வேதங்கள்)பல கற்றவர். பாண்டியன் மகளை மணந்தவர்.  எல்லா வித்தைகளிலும் சிறந்தவர். பக்தியின் பாற்பட்டு நாட்டைத் துறந்து தேசாந்திரம் சென்றவர். என்பன போன்ற குறிப்புகள் காணப்படும்.

சுருதி என்பது வேதத்தை மட்டுமல்லாது ஆதி,பண்டைய,மூலம் என்ற பொருளும் உடையது.ஆகவே தான் சுருதிமான்கள் இக்குலத்தின் ஆதி மூலமான முதன்மையானவர் என்ற பொருளுடைய மூப்பனார் என்ற பட்டம் உடையோர் ஆனார்கள்.

மெய்ப்பொருளார் மற்றும் நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்புகள் பெரிய புராணம் வாயிலாக கிடைத்துள்ள நமக்கு குலசேகரர் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லாமல் போகவில்லை. சைவ மதப்பற்றால் மறைக்கப்பட்டுள்ளது. சைவம் ஓங்கியிருந்த அக்காலத்தில் வைணவ ஆழ்வாரான குலசேகரர் அடையாளம் காட்டப்படாமல் பொதுவாக சுருதிமான் குலசேகரர் என குறிக்கப்பட்டுள்ளார்.

கருவூர் கொல்லி மாநகரை தலைநகராக கொண்ட சேர மன்னனான குலசேகரர் கொங்கர் கோமான் என்று அழைக்கப்பட்டார். பார்க்கவ குலத்தவர்களும் கொங்கராயர் என்ற பட்டம் உடையவர்கள்.

சுருதிமான் என்பதன் முழுமையான அர்த்தம் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்பதே. சுருதிகளில்,போர் பயிற்சிகளில் தேர்ந்தவர்.

அதே போல் குலசேகர ஆழ்வாரும் சுருதிகளில் தேர்ந்தவராயும்,போர் செய்வதில் வல்லமை உடையவராயும் வரலாற்றில் காணப்படுகிறார்.

ராம காதையால் ஈர்க்கப்பட்டு திருவாய் திருமொழி என்ற பாடல்களை ஆழ்வார் பாடியுள்ளார். இவரின் வீரத்தை கண்டு பாண்டியன் தன் மகளை இவர்க்கு மணம் செய்வித்ததாக அறிய முடிகிறது. ஆழ்வாரது பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படும்.

சுருதிமான் குலசேகரரும் பாண்டியன் மகளை மணந்ததாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக குலசேகர ஆழ்வார் பக்தி காரணமாக

"ஆனான செல்வத்துஅரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று கூறி நாடு துறந்து துறவு பூண்டு திருவரங்கம் சென்றார். சுருதிமான் குலசேகரரும் பக்தி காரணமாக நாடு துறந்து துறவறம் பூண்டு திருக்கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.


அநேக ஒற்றுமை உள்ள இருவரது வரலாறும் இருவரும் ஒருவரே என்பதை தெளிவாக உணர்த்தும்.


பார்க்கவ வம்சத்தில் சைவ மதம் வலிமை பெற்று விளங்கிய காரணத்தாலும் அனைவரும் தீவிர சைவர்கள் ஆக இருந்ததாலும் சுருதிமான் குலசேகரனே குலசேகர ஆழ்வார் என்ற தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.           தலையாய காரணமாக வன்னியப் பட்டம் கொண்ட காரணத்தால் அறியாமையாக வன்னிய இனக்குழுவில் இணைக்கப்பட்ட நம் மக்களின் சிலரது உரிமையைக் கொண்டே சேரமான் குலசேகரரை அவ்வினத்தோர் உரிமைகொள்ளும் படி ஆனது. அன்றைக்கு சூழலில் அந்நியரின் அரசியல் வழி நடத்தலால் பார்க்கவர்களும் குலப்பெருமை கோராது அறியாமையாக வாளாதிருந்திருக்கின்றனர்.
குலசேகரர் என்றால் குலத்தின் சிகரமானவர் என்று பொருள் உண்டு. குலத்தின் சிகரமான ஆழ்வாரை,நம் மலையமான்கள் அருமை உணராது உரிமைகோராது இருந்து கொண்டனர். அதே வேளையில் (வன்னியர் பட்டத்தால்)வேற்று இனக்குழுவில் அறியாமையால் இணைந்த நம் உடையார் இன மக்களின் மூலமாக குலசேகர ஆழ்வாரை குல உயர்வு செய்தே ஆக வேண்டிய நிலையில் அன்றைக்கு இருந்தோர் சத்திரிய பெருமை வேண்டி தமது இனம் என்று உரிமை கூறிக் கொண்டனர். ஏனெனில் நம் பார்க்கவ குல அரசர்களை உரிமை கோரினால் மட்டுமே சத்திரியர் என்று பட்டம் பெற முடியும்.



மனிதரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எங்கும் இல்லை. சாதி இரண்டொழிய வேறில்லை.

இட்டார் பெரியார் ,இடாதோர் இழி குலத்தார்.

சேரமான் பெருமாள் அனைவருக்கும் பொதுவானவரே.

ஆனால் சுருதிமான் குலசேகர ஆழ்வாரே நம் குல முதல்வர் என்பதையும் மலையமானின் பார்க்கவ குல மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.



இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் 
எங்கள் குலசே கரனென்றே கூறு.

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 

வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன்முடி வேந்தர் சிகாமணியே.

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)

"முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். 

இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்த போது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.

ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.

ஆதித்த சோழன் யானைமீது பாய்ந்து வல்லப அபராஜிதவர்மனைக் கொன்ற போது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.

பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.

இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும்போது அவனை ஒரு பழுவேட்டரையர் தம் மடியின் மீது போட்டுக்கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார்.

அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தான்."

மேற்கண்ட கூற்றுகள் கல்கியின் கற்பனைகளா அல்லது உண்மையிலேயே நிகழ்ந்தவைகளா? இங்குதான் கல்கியின் திறமை பளிச்சிடுகிறது. 'வரலாற்றையும் கற்பனையையும் எந்த விகிதத்தில் கலந்து அளித்தால் வாசகர்கள் பிரமிப்படைவார்கள்?', 'எந்த விஷயத்தை எப்படி எழுதினால் யோசிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்?' என்றெல்லாம் நிச்சயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இல்லாவிடில், ஒரு மனிதனின் முதுகு/தோள் மீதேறிப் பாய்ந்து, யானை மேல் இருப்பவனைக் கொல்லமுடியுமா? என்றெல்லாம் யோசிக்காமல் மந்திரத்துக்குக் கட்டுண்டாற்போல் பொன்னியின் செல்வனைப் படித்து ரசித்திருப்போமா? படித்துப் பல வருடங்கள் ஆனபிறகும் அதன் பாதிப்பு நீங்காமலிருக்குமா?

கதை ஏற்படுத்திய பாதிப்புக்குக் கொஞ்சம் வரலாற்று மருந்து தடவுவோமா?

முதலாம் பராந்தகர் காலத்தில் வெள்ளலூர் என்ற இடத்தில் இராஜசிம்மப் பாண்டியனும் இலங்கை வேந்தனும் இணைந்து சோழர்களை எதிர்த்த போரில் சோழர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியவராகப் பழுவேட்டரையர் கண்டன் அமுதனைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இருப்பினும், மேற்கண்ட கூற்றுகள் உண்மையோ என்று எண்ணுமளவுக்கு வீரத்தைப் போற்றியவர்கள் பழுவேட்டரையர்கள் என்று பழுவூரிலிருக்கும் கல்வெட்டுகளின்வழி அறிந்தோம். போரிலோ வீரவிளையாட்டுகளிலோ வீரமரணமடைந்த படைவீரர்களுக்கு விளக்கெரித்துக் கௌரவித்திருக்கிறார்கள். முதலாம் பராந்தகர் காலத்திலிருந்து சுந்தர சோழர் காலம் வரை தொடர்ந்து போர்களில் சளைக்காமல் ஈடுபட வேண்டுமானால், மன்னர் மற்றும் படைத்தலைவர்களின் ஊக்குவிப்பு மிக அவசியம். இந்த விளக்கெரிக்கும் பண்பு வீரர்களின் களம் பல காணும் விழைவுக்கு எண்ணெய் வார்த்தது எனலாம்.

காதலையும் வீரத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த தமிழர்களின் பலகாலகட்ட வரலாற்றுச்செய்திகள் வெளியுலகுக்கு உணர்த்தப்படாமலே போய்விட்டன. இன்று அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்களிடம், 'பழங்காலத்தில் வாழ்ந்த மாபெரும் வீரர்கள் யார்?' என்று கேட்டால், முதலில் வரும் பதில் 'ஜப்பானிய சாமுராய்கள்' என்பதே. அந்த அளவுக்கு வரலாற்றிலும் ஊடகங்களிலும் இவர்களை முன்னிலைப்படுத்தி, தனக்கென்று ஓர் அடையாளம் தேடிக்கொண்டது ஜப்பான். சாமுராய் என்பவன் போர்முனையில் தைரியமாகப் போரிட்டு, தோற்க நேர்ந்தால் தற்கொலை செய்து மடிவது மரபு. ஆனால் மிகுந்த தீரத்துடன் போரிட்டு, தோற்பதாக இருந்தாலும் பகைவன் கையால் நெஞ்சில் வேல்வாங்கி மரணமெய்துவது நம் மறத்தமிழர்கள் மரபு. முதுகில் காயம்பட்டால்கூட வீரத்துக்கு இழுக்கு என்று நெறி வகுத்து வாழ்ந்த நம் தமிழ் வீரர்கள் சாமுராய்களைவிட எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அவர்களின் வீரச்செயல்கள் கல்லெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அச்செழுத்துக்களுக்கு அறிமுகப்படுத்தப்படாமை ஏன்? இதைப்பற்றி வேறொரு தருணத்தில் விவாதிப்போம்.

வீரம் மட்டுமா? கலைகளும் திருவிழாக்களும் கூடப் பழுவேட்டரையர்களின் காலத்தில் மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்தன. சென்ற மாதக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த இராஜராஜீசுவரத்துக்கும் பகைவிடையீசுவரத்துக்கும் இடையிலான பல்வேறு ஒற்றுமைகளுடன் இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. அதுதான் தளிச்சேரி. தளிச்சேரி என்பது, இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஆடல்நங்கைகள் வாழுமிடம். தஞ்சையைப் போலவே பழுவூரிலும் இரு சிறகுகளுடன் கூடிய ஒரு தளிச்சேரி இருந்திருக்கிறது. இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நாங்கள் யோசித்த விஷயம் இந்தச் சிறகுகளைப் பற்றித்தான். பெரிய மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் இருக்கும் கட்டடப் பிரிவுகளைக் குறிப்பிட North wing, South wing போன்ற பதங்களைப் பயன்படுத்துவோம். Wing என்பதைச் சிறகு என்ற பொருளிலேயே கல்வெட்டுகள் சுட்டுவது வியப்பையே அளிக்கிறது. இக்கல்வெட்டுகள் செதுக்கப்பட்ட காலத்தில் ஆங்கிலத்துக்கும் தமிழகத்துக்கும் தொடர்பே இல்லை. ஒருவேளை பிற்காலத்தில் இந்தப் பயன்பாடு தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்குப் போனதா என்ற ஐயத்தையும் தோற்றுவிக்கிறது.

பழுவூரிலிருக்கும் மற்ற கோயில்களைவிட அவனிகந்தர்ப்ப ஈசுவரம் சற்று பெரியது. ஒரே வளாகத்துக்குள் 8 ஆலயங்களை உள்ளடக்கியுள்ளது. பல்லவர் காலத்தில் இதுபோன்று ஒரே வளாகத்தில் பல கோயில்களை அமைப்பது தொடங்கி விட்டது. பிற்காலத்தில் இணைக்கப்பட்ட ஆலயங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாவிட்டால், இன்று காணக்கிடைக்கும் இத்தகைய கோயில்கள் பின்வருமாறு :-

1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் (மகேந்திரவர்ம ஈசுவர கிருகம், கைலாசநாதர் ஆலயம் மற்றும் மதிலையொட்டி இருக்கும் சிறு ஆலயங்கள்)
2. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (க்ஷத்திரிய சிம்மேசுவரம், நரபதிசிம்ம விஷ்ணுகிருகம், இராஜசிம்மேசுவரம்)
3. கொடும்பாளூர் மூவர் கோயில்
4. திருவையாறு (பஞ்சநதீசுவரர் கோயில், வட கைலாயம், தென் கைலாயம்)
5. கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைகொண்ட சோழீசுவரம், வட கைலாயம், தென் கைலாயம்).



அவனிகந்தர்ப்ப ஈசுவரத்தைச் சற்று நுணுகிக் கவனித்தபோது பல விஷயங்கள் எங்கள் கவனத்தை ஈர்த்தன. வாழ்க்கையிலேயே முதல்முறையாகக் (நான்கு வருடங்களுக்கே இப்படியா?) கல்வெட்டுகளில் புள்ளி வைத்த எழுத்துக்களைக் கண்டோம். இது மட்டுமல்ல. பழுவேட்டரையர்கள் பழுவூரை ஆள ஆரம்பித்தது முதலாம் ஆதித்தரின் ஆட்சிக்காலத்தில் என்று இங்கிருக்கும் ஆதித்தரின் கல்வெட்டுகள் வழி அறியலாம். பழுவூர் மட்டுமல்லாது, சோழதேசத்தின் பிற பகுதிகளிலும் இருக்கும் கல்வெட்டுகளின் வழி, பழுவேட்டரையர்களின் வம்சாவளியையே வடித்தெடுத்து விடலாம். பின்வரும் செய்திகளைத் தொகுத்துப் பாருங்கள்!


எண்கல்வெட்டு இருக்குமிடம்கோயில் பெயர்சோழமன்னர்ஆட்சியாண்டுபழுவேட்டரையர்செய்திஆண்டறிக்கை எண்
1திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்10குமரன் கண்டன்நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையதுSII Volume 5, No. 523
2மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்12குமரன் கண்டன்'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார்SII Volume 3, No. 235
3திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்19குமரன் மறவன்இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம்SII Volume 5, No. 537
4மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்22குமரன் மறவன்இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார்SII Volume 8, No. 298, ARE 355 of 1924
5லால்குடிசப்தரிஷீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்5குமரன் மறவன்'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறதுSII Volume 19, No. 146
6திருப்பழனம்மகாதேவர் கோயில்முதலாம் பராந்தகர்6குமரன் மறவன்குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறதுSII Volume 19, No. 172
7கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் பராந்தகர்12கண்டன் அமுதன்வெள்ளலூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்திARE 231 of 1926
8திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்14கண்டன் அமுதன்இது 'வெள்ளலூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறதுSII Volume 5, No. 551
9மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்சுந்தரசோழர்5மறவன் கண்டன்இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறதுSII volume 5, No. 679
10கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்9மறவன் கண்டன்இவரது மறைவைத் தெரிவிக்கிறதுSII Volume 19, No. 237, 238
11உடையார்குடிஅனந்தீசுவரர் கோயில்உத்தமச்சோழர்12கண்டன் சத்ருபயங்கரன்இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான்SII Volume 19, No. 305
12கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்13கண்டன் சுந்தரசோழன்இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர்SII Volume 5, No. 681
13மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்உத்தமச்சோழர்15கண்டன் மறவன்நிவந்தம் அளித்ததுSII Volume 8, No. 201
14மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்3கண்டன் மறவன்கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறதுSII Volume 5, No. 671
15மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்15கண்டன் மறவன்இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவேARE 363 of 1924
16கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் இராஜேந்திரர்8யாருமில்லைபழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறதுSII Volume 5, No. 665


இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.

1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்

இதுதான் 
கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!

கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.



"முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்." என்று பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.

மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி 'பெரிய பழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரையரையும்' எங்கிருந்து எடுத்தார் என்று?

இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம். பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.

கிளை முறைகளும்--மறவர் குல பழக்க வழக்கமும்

கிளைகள் என்றால் என்ன?

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம்.
கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே.
கிளை என்பது பென்னை சார்ந்தது.
இதை பென் வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னின் கிளையே சாரும்.
ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.
ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவாம் எனவே தன் மக்க்ளுக்கே சம்பந்தம் செய்வர்.


மறவரின் வகைகளும் கிளைகளும்: 

38 பிரிவுகள்:
நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி, வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரிய10ர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது, கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.

கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்:
1.    மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை    கற்பகக் கொத்து
2.    வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை     முந்திரியக் கொத்து
3.    வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை    கமுகங்கொத்து
4.    சேதரு கிளை
வாள் வீமன் கிளை    சீரகக் கொத்து
5.    கொடையன் கிளை
அரசன் கிளை    ஏலக்கொத்து
6.    ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை    தக்காளி கொத்து
7.    சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை    மிளகுக் கொத்து
8.    ஒளவையார் கிளை
ஜாம்பவான் கிளை    தென்னங்கொத்து
9.    நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை    மல்லிகை கொத்து
10.  வன்னியன் கிளை
  -வெற்றிலை கொத்து
அன்புத்திரன்
11.  சடைசி கிளை
                        -ஈசங்க்கொத்து
 பிச்சிபிள்ளை கிளை
12.   லோகமூர்த்தி
                      -பனங்க்கொத்து

அஞ்சுகொடுத்து மறவர்:
1.தாது வாண்டார்
2.மனோகரன்
3.வீரன்
4.அமரன்
5.வடக்கை
6.தொண்டமான்

காரன[சக்கரவர்த்தி] மறவர்.
1.தேவன்
2.ராயர்
3.பன்டயன்
4.பருவச்சான்
5.முருகதினி 
6.வளத்தான்
செம்பிநாட்டு மறவர்:
1.மரிக்கா
2.பிச்சை
3.தொண்டமான்
4.கட்டூரான்
5.கருப்புத்திரன்
6.சீற்றமன்
7.தனிச்சன் 
ஆறு நாட்டு வடாகை மறவர்:
1.பொன்னன்
2.சீவலவன்
3.பீலிவலன்
4.கொட்டுரான்
5.நம்புனார்
6.குழிபிறை

உப்புகட்டு மறவர்:
1.புரையார்
2.குட்டுவான்
3.கொம்பன்
4.வீரயன்
5.கானாட்டன்
6.பிச்சை தேவன்
7.கோனாட்டன்

கார்குறிச்சி மறவர்:
1.நம்பியன்
2.மழவனார்
3.கொடிபிரியான்
4.படைகலைசான்
5.கூற்றுவ
6.குத்துவான்

பட்டம்கட்டி மறவர்:
1. காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை
2. குட்டினி கிளை - கானாட்டான் கிளை 
3. காவடி கிளை - மின்னாட்டன் கிளை
4 . பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை 
5. தோப்பர் கிளை - குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை
7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை 




அனைத்து உட்பிரிவு மறவர்களுக்கும் கிளை இருக்கும் .கால போக்கில் மறந்துஇருப்பர். நமது தொகுப்பில் 50 கிளைகள் மற்ற மறவரில்
50 கிளைகள்:
செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், வேம்பளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.

மொத்தம் 120 கிளைகள் அறிந்த அளவு உள்ளது.

மறவர் படை

மறப்படை


ஆதிகாலம் முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள் உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்புமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் பிறந்த மறக்குலத்தையே அவமதிக்கும் விதத்தில் வீனர்கள் சிலர் வீண்வதந்திகளைப்பரவவிட்டு அவர்களின் மானம் மரியாதைக்கு பங்கம் விளையும் விதத்தில் சிலம்பு போன்றவர்கள் தவறாக பின்னோட்டம் எழுதுவதை கடுமையாக இதன்மூலம் சாடுகிறேன் , அந்த அன்பருக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும். அவருக்குமட்டுமல்ல அவரைப்போன்றவர்களும் ஒரு கேள்வியை என்முன் வைப்பார்கள். அந்த கேள்வி இதுதான்.“முக்குலத்து மக்கள் மட்டும்தான் போர்க்களம் சென்று போரிட்டு உயிர்த்தியாகம் செய்தார்களா? மற்ற இனத்தவர்கள் போர்க்களம் செல்லவில்லையா?” உங்கள் கேள்வி நியாயமானதுதான். மன்னர்களின் ஆட்சியிலும் முற்காலத்திலும், அரசனின் படைகள் இரண்டு வகை. ஒன்று, மூலப்படை. மற்றொன்று தற்காலிகப்படை. போர்க்காலங்களில் மட்டும் திரட்டப்படும் படை தற்காலிகப்படை. போர்முடிந்தவுடன் அத்தற்காலிகப்படைகள் கலைக்கப்பட்டுவிடும். தற்காலிகப்படைகளுக்கும் போர்பயிற்சி அளித்து போர்க்களம் புகும்படி செய்கின்ற படை மூலப்படை. மூலப்படை ஒன்றுதான் தலைமுறை தலைமுறையாக களவர் என்னும் குடும்பத்திலிருந்து பாட்டன், பூட்டன், முப்பாட்டன், எள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்திலிருந்தும் அதற்கும் முற்பட்ட அவனுடைய மூதாதையர்கள் காலத்திலிருந்தும், ஆண்களாய் பிறந்த களவர்குல மக்கள் அனைவரும் உலகம் தோன்றிய காலம் முதல் போர்த்தொழிலை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். மற்ற இனத்தவர்கள் அவ்வாறில்லை. அவர்களின் குலத்தொழில் வேறு. தலைமுறை தலைமுறையாக போர்க்களத்தொழில் அவர்களுடையது அல்ல. மற்ற இனத்திலிருந்து போருக்கு தந்தை சென்றிருந்தால், மகன் சென்றிருக்கமாட்டான். செல்லவேண்டிய கட்டாயமும் இல்லை. விருப்பப்பட்டால் மட்டுமே சென்றிருப்பான். அவர்கள் போருக்குச்சென்றால் அதற்கான ஊதியம் பெற்றிருப்பான். ஆனால், முக்குலத்துமக்கள் ஊதியத்தை கருதாது அரசனின் வெற்றி, பிறந்தமண்ணின் மானம் ஒன்றையே கருத்தில்கொண்டு உயிரைப்பற்றி கவலைப்படாமல் சென்றனர். இது அவர்களின் கட்டாய தொழில். மறக்குலப்பெண்களும் தன்குலஆண்களை கட்டாயமாக போர்க்களம் அனுப்பிவைத்ததை தொல்காப்பியரும்(புறத்.சூத்.4) இளம்பூரணாரும்,புறநானாறும்(279) சான்று கூறுகின்றன., இதைப்பற்றி மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் எழுதியுள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். ” மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும், எவ்வகை ஊற்றையும் பொருட்படுத்தாததும், இறப்பிற்கு அஞ்சாததும், போரையே விரும்புவதும், அரசனைக் காக்க என்றும் உயிருவந்தீவதும், எக்காரணத்தையிட்டும் அறைபோகாததும், வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம்.”(ஊற்று-ஊதியம் அல்லது பிரதிபயன். அறைபோகாதது-சோரம்போகாதது அல்லது விலைபோகாதது)(ஆதாரம்: பழந்தமிழாட்சி என்ற நூலில் பக்கம்.47) (இதனைப்பற்றிய விரிவான விவரங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதுவேன். இக்கட்டுரையில் இதுபோதும் என விரிவஞ்சி விடுக்கிறேன்.) இதுபோன்ற நல்லசெய்திகளையெல்லாம், சிலம்பு போன்றவர்களும் பெரும் பதவி வகித்தவர்களும் திட்டமிட்டு மறைத்தே வந்தனர். இன்றும் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து முக்குலத்து இளைஞர்கள் தங்கள் குலப்பெருமை. காக்க மறைத்துவைக்கப்பட்டுள்ள அருமை பெருமைகளை மீட்டுவர முயற்சி செய்யவேண்டும். தமிழ் இலக்கியங்கள் கூறும் புறப்பொருள் நம் குலத்திற்குரியது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழம்பெருமை எதற்கு என்று நீங்கள் நினைக்க்க்கூடாது. பழம்பெருமையைமீட்டு நாம் முன்னோர்களைப்போல் புகழ்பட வாழவேண்டும். பிறந்த மண்ணின்மீதும், தாய்த்திருநாட்டின்மீதும், தன் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் நம்முன்னோர்கள். அதனால்தான், அவர்களைப்பற்றி கல்வெட்டுக்கள் பேசுகின்றன. செப்புப்பட்டயங்கள் சான்று கூறுகின்றன. இலக்கியங்கள் புகழ்மாலை சூட்டுகின்றன. கம்பநாட்டாள்வார், சேக்கிழார் பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார், நம்பியாண்டார் நம்பி அடிகள்,ஒட்டக்கூத்தர் போன்ற புகழ்ப்பெற்ற புலவர் பெருமக்கள் வாயார நம் குலப்பெருமையை பாடியுள்ளனர்.. இதை அறியாத அறிவிலிகள் மட்டுமே நம்மை திருடர் என்று தவறாக பொருள்கூறுகின்றனர். நம் முன்னோர்களின் மரபணுவும் குருதி ஓட்டமும் நம் உடலில் ஓடுகின்றன. நாம் மட்டும் அவர்களின் புகழுக்கும் பெருமைக்கும் மாறுபட்டவர்களா? அல்லது விதிவிலக்கா?. நாமும் அவர்களின் அடிச்சுவட்டை பிறழாது பின்பற்றவேண்டும். இது மறவர் பூமி என்றால், பகைவனும் இடியோசைகேட்ட நாகம்போல், நடுங்கி ஒடுங்கி ஓடிவிடுவான். நாட்டை நாசப்படுத்தும் நாசகார சக்திகள் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிஓடிவிடும்,. வாழ்வதும், வீழ்வதும் தாய்மண்ணுக்காக என்பதே நம் முன்னோர்களின் தாரக மந்திரம். அதுவே நம்முடைய வழி.! பிறந்த மண்ணையும் பெற்றதாயையும் காப்பது நம் கடமை!! (தொடரும்,,,PART IV)

மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு

(A rebel of kollamkondaan against british)

கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். 
பூர்வீகம்:
இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய மன்னர் வம்சமாகும். இவர்கள் மூதாதையர்கள் பல்லவ நாட்டில் இருந்தவர்கள். என்று கூறுகின்றனர். இவர்கள் பண்டாற மறவர் என்ற "வணங்காமுடி பண்டார மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள்.
பின்பு அங்கு இருந்து பெயர்ந்து சோழ நாட்டை அடைந்தனர். பின்பு சோழனிடம் தளபதிகளை வேலை செய்தனர். ஆதாவது வந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள் என்று தம்மை கூறி கொள்வதாக கொல்லம்கொண்டான் வம்சாவளி நமக்கு கூறுகிறது. வந்தியதேவர்கள் என்ற வார்த்தையே "வாண்டாயாத்தேவர்கள்" என மறுவியதாக கூறுகின்றனர்.
இவர்கள் சோழர்களுடன் ஆதரவாக பாண்டியரை வென்று பின்பு சேரநாட்டில் உள்ள கொல்லத்தை வென்று சோழர்கள் இவர்களை இப்பகுதிக்கு குறுநிலை மன்னராக முடிசூட்டி சோழ நாட்டிற்கு சென்று விடுகின்றன்ர்.கொல்லம் கொண்டான் தோன்றிய ஆண்டு 11-ஆம் நூற்றாண்டு என கால்டுவெல்லும் கூறுகிறார்.சோழ ஆளுகை இப்பகதியில் இருந்தததற்கு "சோழபுரம்" என்ற ஊர் அருகில் உள்ளது. இதன் பின்பு பாண்டிய மன்னர்கலுக்கு உட்பட்ட குறுநில மன்னர்களாக இருந்தனர்.

நாயக்கர் ஆட்சி காலத்தில் கொல்லம் கொண்டான் ஜமீன் 72 பாளையங்களில் ஒன்றாக மாற்றபட்டது.அப்போது திருமலை நாயக்கர் இப்பகுதியிலிருந்து மீன் உனவு செல்லுமாம்.ஒரு தடவை இம்மன்னன் அந்த உனவை தன் எல்லை தாண்டி செல்ல அனுமதிக்கமல் தடை செய்தாராம். இதனால் வெகுண்ட திருமலை நாயக்கர் இப்பாளயத்தின் மீது படை நடத்தி அழித்தாராம். பின்பு வருந்திய திருமலை நாயக்கர் இந்த அரன்மனையை கட்டி கொடுத்தாரம். அதிலிருந்து திருமலை என்ற பட்டமும் வழங்கினாராம். இதன் பின்பு இம்மன்னர்களுக்கு திருமலை வாண்டாயாத்தேவர் என்ற பெயர் உருவாகிஉள்ளது.(எ-டு)லிங்க திருமலை வாண்டாயதேவர்,சங்கர பாண்டிய திருமலை வாண்டாயதேவர், அரிகர திருமலை வாண்டாயதேவர் என பலர் வாழ்ந்துள்ளனர். 

முதற்போர்
இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.

 முரட்டுத்தனமான போர்

1766ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை வாண்டாயத்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை வாண்டாயத்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.

இரண்டாம் போர்

1767ல் மீண்டும் பரங்கிப்படை கொல்லங்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்ட் கேம்பல் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் கொல்லங்கொண்டான் கோட்டை தகர்க்கப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம் அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும் தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். அதனால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன் மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் காலையில் போர் உக்கிரமாக நடந்ததால் வாண்டாயத்தேவன் வீர மரணம் அடைந்தார்.

 மகன்

இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார். எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பால் பஞ்சைப் பதாரி போல், ஏழை, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் பஞ்சம் பட்டி என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.

வலைவீச்சு

இவரது மகனுக்கும் வாண்டாயத் தேவன் என்றே பெயரிடப்பட்டது. இவர் சிறிய வயதிலேயே அக்கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அடக்கினார். அந்த புகழினால் இவர் வாண்டாயத்தேவனின் மகன் என ஊர் மக்கள் கண்டு கொண்டனர். அந்த செய்தி பரங்கியருக்கும் எட்டி விட்டதால், பரங்கியர் தங்களைத் தாக்கக் கூடும் என்றறிந்த வாண்டாயத் தேவன் குடும்பமும் அந்த கிராம மக்களும் பஞ்சம்பட்டி கிராமத்தை காலி செய்து விட்டு வேறொரு ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

 நடன மங்கையர்

கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன் அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார்.
வாண்டாயத் தேவர் கொடுத்த அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம்,மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.

முடிவுரை:
KollamkondanLocation of Kollamkondan in Tamil NaduKollamkondan (Tamil: கொல்லன் கொண்டான்) was a territory (Zamin) in the former Tirunelveli province of Madurai Nayak Dynasty ruled by Polygar. Post Independence of India it split into as 2 villages Ayan Kollan Kondan and Zamin Kollan Kondan and come under Virudhunagar District in the southern Indian State of TamilNadu in India.[1] Contents [hide] 1 Palayam Location 2 Polygar 3 Decline and Merger with Sethur Zamin 4 Post abolition of Zamindari 5 References [edit] Palayam Location This Maravar palayam was located near Rajapalayam, at the foot of the Western Ghats, in the former Tirunelveli province of the Nayak dynasty of Madura.[2] [edit] Polygar Polygar Vanda Thevar belonged to the Pandara subcaste of the Maravar. The polygar family was granted the lands by Raja Parakrama Pandya of Pandya Dynasty before the establishment of the Madurai state by Visvanatha Nayaka in the 16th century.[3] It joined Puli Thevar’s coalition in 1754-1762. The polygar of Kollamkondan led a new insurrection in 1764, following Yusuf Khan’s execution for having betrayed the Nawab. Victories over the Anglo-Nawabi forces helped the revolt spread to other polygars. [3] See also: Polygar [edit] Decline and Merger with Sethur Zamin After 1766, General Donald Campbell began a systematic campaign, taking the forts of the major confederates one by one. In 1802, the polygar of Kollamkondan, held only four villagesIn 1879, the zamindari had an area of 1.35 sq. m., and a population of 9,021. Later in 19th century it was included in the zamindari of Sethur. [3] [edit] Post abolition of Zamindari Kollamkondan post independence comprises 2 villages . Both are revenue villages under the Rajapalayam Taluk[1] Zamin Kollan kondan Ayan Kollan kondan - Notable person post independence - Dr.N.Rasaiah - Tamilwriter 

இதன் பின்பு 18-ஆம் நூற்றன் இறுதியில் சேத்தூர் ஜமீனுடன் இனைக்க பட்டது கொல்லம்கொண்டான்.
இந்த வரலாற்றை தற்போதய ஜமீன் வாரிசானலிங்க திருமலை வாண்டாயதேவர்,இராமநாதன் கூற நாம் வழங்கியுள்ளோம்.

 மூலம்

  • குங்குமம் வார இதழ் கட்டுரை[1]
  1.  இரா. மணிகண்டன் (மார்ச் 2011). “வீரப்புலி வாண்டாயத் தேவன்”.குங்குமம் (8): 124 – 129.