உடையார் குலத்தில் பலவகையும்
உயர்வே ளாளர் பலவகையும்
குடையார் குலத்தில் பலவகையும்
கோனார் குலத்தில் பலவகையும்
அடைய வாயில் உடையாராய்&
அளகே சனைப்போல் அருங்கடலின்
மடையார் செல்வம் பெரிதாக
வளம்சேர் சோழ மண்டலமே 30
உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.
மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்
என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.
.................................................................................................................
வள்ளல் குலத்தோராக கம்பன் கூறும் இனத்தவர்கள்:
உடையார் குலத்தில் பலவகையும் அதாவது உடையார் என்றாலே பார்க்கவ குலம்(நத்தமான்) என்றே பொருள் கூறுகிறார் ஆசிரியர்.
சுருதிமானும் மலையமானும் இதே பார்க்கவ குலத்தையே சார்ந்தவர்கள் என்றும் இதையே உடையார் குலத்தில் பலவகையும் என்று அழகாக தெளிவுபடுத்துகிறார் உரையாசிரியர். நத்தமான்,மலையமான்,சுருதிமான் மூவருக்கும் பார்க்கவ கோத்திரம் என்ற கல்வெட்டு,செப்பேடு ஆதாரம் இருப்பதும் இதையே தெளிவாக உறுதி செய்கிறது.
செல்வந்தராய் இருந்து வாரி வழங்கும் வள்ளல் குலத்தினர் என்று கம்பர் கூறும் குலங்களாவது நம் பார்க்கவ குல உடையார் குலம் ஒன்றும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உயர் வேளாளர் அதாவது உழுதுண்ணும் வெள்ளாளர் அல்லாது உழுவித்துண்ணும் உயர் குடி வேளாளர் இனத்தவரையும் (சோழிய வேளாளர்),
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குடையார் குலத்தில் பலவகையும் இவர்கள் திரைகடலோடி திரவியம் தேடிய வணிக குலத்தவர் ஆகிய பண்பிற் சிறந்த சிவ நேசச் செல்வர்கள் ஆகிய நகரத்தார் என்ற செட்டியார் இனத்தவர்களையும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கோனார் குலத்தில் பலவகையும், அதாவது ஆநிரைச் செல்வங்கள் அநேகம் கொண்ட செல்வக் குடியினரான கோனார் குலத்தில் உள்ளவர்களையும் கூறுகிறார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆக இந்த உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகியோர் குபேரனைப் போல செல்வம் கொண்டவர்கள் என்றும் இவர்களில் பலர் வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்துள்ளார்கள் சோழ தேசத்தில் என்கிறார்.
சடையப்ப வள்ளல் இவர்களில் நம் பார்க்கவ குல உடையார்
இனத்தவர் ஆகவே அவரை உடையான் சரராமன் என்று கம்பர் கூறுகிறார்.
மேலும்
குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூறவிணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனுமணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே சோழமண்டல சதகம்
நம் உடையார் இனத்தில் பிற்கால மலையமான்கள் சேதிராயர் பட்டம் கொண்டு ஆண்டுள்ளனர். அதையே இங்கு உடையான் சடையப்ப வள்ளலுக்கு உள்ள சேதிராயன் பட்டம் உறுதி செய்கிறது. ஆக என்றைக்கும் சிறந்த புகழ் வாய்ந்த வள்ளல் குலமும் வேளிர் குலமும் உடையார் குலமாகிய நம் பார்க்கவ குலமே ஆகும்.
எளியோர்க்கு ஈவதே எம் பிறவிக் கடன் எனக் கொள்ளுங்கள் வள்ளல் குலமாகிய பார்க்கவ குலத்தோரே. அதுவே நம் குல தர்மம் ஆகும்.