வேளிர் யார் என்ற கேள்விக்கு விடையாக குறிஞ்சிக் கோமான் கபிலர் அவர்கள் இருங்கோவேள் என்ற வேளிர் குல அரசனை நோக்கி பாடிய பாடல் ஒன்று விடை கூறும்.பாடல் இது தான்...
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன் படு மால் வரைக் கிழவ, வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங் குரைய நாடு கிழவோயே!
பாடலின் பொருளாக அறிஞர்கள் கூறுவது.
வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!
வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன் படு மால் வரைக் கிழவ, வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங் குரைய நாடு கிழவோயே!
பாடலின் பொருளாக அறிஞர்கள் கூறுவது.
வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!
வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.
தடவு என்ற சொல்லுக்கு மேற்கூறியவாறும்,மண்பாண்டம்,மலை சூழ் இடம் என்றும் பலரும் பலவிதமாக பொருள் கூறுகின்றனர்.
ஆனால் பொதுவாக வேளிர்கள் தம்மை ஏதேனும் ஒரு ரிஷியின் கோத்திரம் என்றே கூறுவார்கள்.
உதாரணமாக மலையமான்கள் தம்மை பார்க்கவ கோத்திரமாகவும், பல்லவர்கள் தம்மை பரத்வாஜ கோத்திரமாகவும் கூறிக்கொள்வர். தடவு என்பதை தடம் என்ற வழிகாட்டுதல் என்ற பொருள் கொள்தலே சரியான முறையாகும். ஏனெனில் முனிவர்களின் யாக நெருப்பிலிருந்து தங்களது குல முதல்வர்கள் தோன்றினர் என்று கூறும் கதைகள் நம்மிடம் காணப்படுகிறது. ஆனால் நெருப்பிலிருந்து மனிதன் தோன்ற இயலாது என்பதே யதார்த்தம்.அப்படியெனில் யாக நெருப்பிலிருந்து தோன்றினர் என்பதை குரு குல போதனை அல்லது வழி காட்டுதல் படி வாழ்பவர்கள்.என்றே பொருள் கொள்ளவேண்டும். குல குருக்களின் போதனை வழி நடத்தலின் பேரிலேயே தேவர் அசுரர் போன்றோரும்,புராண மற்றும் வரலாற்று அரசர்களும் கூட நெறிப் படுத்தப்பட்டுள்ளனர். குல குரு என்பதையே முனிவன் என்றும் தடவு என்பதை கோத்திரம் என்ற வழிகாட்டும் நெறிமுறை என்றே பொருள் கொள்வது சரியானதாக இருக்கும்.
வேளிர்கள் என்போர் துவாரகையிலிருந்து கண்ணன் எனப்படும் யாதவ அரசரால் தென்னகம் நோக்கி அனுப்பப்படுகின்றனர். அது ஏதேனும் ஒரு போரின் நிமித்தமாகவோ,
எல்லைகளை விரிவு கொள்ளும் நோக்கத்தோடோ இருக்க வேண்டும். ஆய்வுகளின் படி தோராயமாக 3250 - 3,300 ஆண்டுகளுக்கு முன் துவாரகையில் இருந்து தென்னகம் நோக்கி வந்துள்ளனர்.
அவ்வாறு வந்த வேளிர்களின் வம்சத்தில் வந்தோர் தான் தற்போதுள்ள வேளிர் குடியினர். அதனால் தான் கோத்திரம் கூறும் மரபு வேளிர் குல சத்திரியர்கள் இடையே காணப்படுகிறது. சம்புவராயர் சம்பு கோத்திரம்.
பார்க்கவ குலத்தவர்கள் சத்திரியர்கள்.
வேளிர்களை வெள்ளாளர்களோடு தொடர்பு படுத்திக் கூறிக்கொள்வது தன் சார்புக் கொள்கை மட்டுமே. வேள் என்பவன் அரசன் அவர்களால் ஆளப்படுபவர் வெள்ளாளர் இதுவே உண்மை.
பார்க்கவ குலத்தவர்கள் சத்திரியர்கள்.
வேளிர்களை வெள்ளாளர்களோடு தொடர்பு படுத்திக் கூறிக்கொள்வது தன் சார்புக் கொள்கை மட்டுமே. வேள் என்பவன் அரசன் அவர்களால் ஆளப்படுபவர் வெள்ளாளர் இதுவே உண்மை.
வேளிர்களை கண்ணன் அனுப்பியதாக கூறுகின்றனரே அப்படியாயின் அவர்களுக்கும் வடக்கிலுள்ள யாதவ அரச குலத்திற்கும் இங்குள்ள வேளிர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா.
இதோ தொடர்பு பற்றிய ஆதாரம்..
திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் திருக்கோவில் கல்வெட்டுகளில்
பார்க்கவ கோத்திரத்து யாதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னன் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பார்க்கவ கோத்திரத்து யாதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னன் பற்றிய குறிப்புகள் உள்ளன.
யாதவ குலம் என்று நத்தமான்கள் கல்வெட்டு உள்ளது. சுருதிமான்கள் யது குலம் ஆகிய இருங்கோளர் என்றும் கூறியுள்ளார் கல்வெட்டுகளில் .
மலையமான் இனத்தின் உட்பிரிவான (சுருதிமான்) இருங்கோவேள் குலத்தவர்களை யது வம்ச கேது என்று கூறும் கல்வெட்டும் உள்ளது. பார்க்கவ குலத்தவர்கள் உண்மையில் யது குல க்ஷத்ரியர்கள் ஆன வேளிர் குலம் ஆவார்கள்.
மலையமான் இனத்தின் உட்பிரிவான (சுருதிமான்) இருங்கோவேள் குலத்தவர்களை யது வம்ச கேது என்று கூறும் கல்வெட்டும் உள்ளது. பார்க்கவ குலத்தவர்கள் உண்மையில் யது குல க்ஷத்ரியர்கள் ஆன வேளிர் குலம் ஆவார்கள்.